செய்திகள்
மணிப்பூரில் நாகா மக்கள் எம்.எல்.ஏ.க்கள் 4 பேர் கவர்னருடன் சந்திப்பு
மணிப்பூரில் பா.ஜனதாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் நாகா மக்கள் முன்னணி கட்சியை சேர்ந்த 4 எம்.எல்.ஏ.க்கள் கவர்னர் நஜ்மா ஹெப்துல்லாவை இன்று சந்தித்தனர்.
இம்பால்:
மணிப்பூர் சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் காங்கிரஸ் 28 இடங்களிலும், பா.ஜனதா 21 இடங்களிலும் வெற்றி பெற்றன.
சிறிய கட்சிகள் ஆதரவுடன் மணிப்பூரில் பா.ஜனதா ஆட்சி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. மாநில சட்டமன்ற பா.ஜனதா தலைவராக பிரேன்சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆனால் கவர்னர் இன்னும் ஆட்சி அமைக்க அழைப்பு அனுப்பவில்லை.
இந்த நிலையில் பா.ஜனதாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் நாகா மக்கள் முன்னணி கட்சியை சேர்ந்த 4 எம்.எல்.ஏ.க்கள் கவர்னர் நஜ்மா ஹெப்துல்லாவை இன்று சந்தித்தனர். அவர்கள் பா.ஜனதாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் கடிதத்தை கொடுத்தனர்.
மணிப்பூர் சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் காங்கிரஸ் 28 இடங்களிலும், பா.ஜனதா 21 இடங்களிலும் வெற்றி பெற்றன.
சிறிய கட்சிகள் ஆதரவுடன் மணிப்பூரில் பா.ஜனதா ஆட்சி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. மாநில சட்டமன்ற பா.ஜனதா தலைவராக பிரேன்சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆனால் கவர்னர் இன்னும் ஆட்சி அமைக்க அழைப்பு அனுப்பவில்லை.
இந்த நிலையில் பா.ஜனதாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் நாகா மக்கள் முன்னணி கட்சியை சேர்ந்த 4 எம்.எல்.ஏ.க்கள் கவர்னர் நஜ்மா ஹெப்துல்லாவை இன்று சந்தித்தனர். அவர்கள் பா.ஜனதாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் கடிதத்தை கொடுத்தனர்.