செய்திகள்
ஜுலை 1 முதல் நாடு முழுவதும் ஜி.எஸ்.டி வரி அமல்படுத்தப்படும்: மத்திய அரசு
நாடு முழுவதும் ஜி.எஸ்.டி வரி ஜுலை 1 முதல் அமல்படுத்தப்படும் என, மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது.
புது டெல்லி:
நாடு முழுவதும் ஒரே சீரான மறைமுக வரி விதிப்புமுறையை அமல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக ஜி.எஸ்.டி. என்னும் சரக்கு, சேவை வரி சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில்,நாடு முழுவதும் ஜி.எஸ்.டி வரி ஜுலை 1 முதல் அமல்படுத்தப்படும் என மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது.
இது குறித்து பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்தி காந்த தாஸ் கூறுகையில் “ஜுலை 1 முதல் நாடு முழுவதும் ஜி.எஸ்.டி வரி முதல் அமல்படுத்தப்படும். மசோதாவுக்கு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். ஜி.எஸ்.டி மசோதாவை விரைவில் அமல்படுத்த அனைத்து மாநில அரசுகளும் விருப்பம் தெரிவித்துள்ளன” என்றார்.
சரக்கு, சேவை வரி சட்டம் அமலுக்கு வந்து விட்டால் நாடு முழுவதும் எல்லா மாநிலங்களிலும், எல்லா பொருட்களும் ஒரே விலைக்கு விற்கப்படுகிற நிலை உருவாகி விடும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
நாடு முழுவதும் ஒரே சீரான மறைமுக வரி விதிப்புமுறையை அமல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக ஜி.எஸ்.டி. என்னும் சரக்கு, சேவை வரி சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில்,நாடு முழுவதும் ஜி.எஸ்.டி வரி ஜுலை 1 முதல் அமல்படுத்தப்படும் என மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது.
இது குறித்து பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்தி காந்த தாஸ் கூறுகையில் “ஜுலை 1 முதல் நாடு முழுவதும் ஜி.எஸ்.டி வரி முதல் அமல்படுத்தப்படும். மசோதாவுக்கு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். ஜி.எஸ்.டி மசோதாவை விரைவில் அமல்படுத்த அனைத்து மாநில அரசுகளும் விருப்பம் தெரிவித்துள்ளன” என்றார்.
சரக்கு, சேவை வரி சட்டம் அமலுக்கு வந்து விட்டால் நாடு முழுவதும் எல்லா மாநிலங்களிலும், எல்லா பொருட்களும் ஒரே விலைக்கு விற்கப்படுகிற நிலை உருவாகி விடும் என்பது குறிப்பிடத்தகுந்தது.