செய்திகள்
மணிப்பூர் மாநிலத்தில் நிலநடுக்கம் ரிக்டரில் 5.2 ஆக பதிவு
மணிப்பூர் மாநிலத்தில் இன்று மாலை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் 5.2 ஆக பதிவாகியுள்ளது.
புது டெல்லி:
மணிப்பூர் மாநிலத்தில் இன்று மாலை 5.32 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. மணிப்பூர் மாநிலத்தின் சுரச்சந்த்ரபூர் மாவட்டத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 5.2 ஆக ஆக பதிவாகியுள்ளது.
சுமார் 20 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நில அதிர்வு இருந்ததாக தேசிய மைய நிலநடுக்கவியல் மற்றும் புவி அறிவியல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தினால் உண்டான சேதங்கள் குறித்து இதுவரை தகவல் எதுவும் வெளியாகவில்லை. இன்று அதிகாலை 3.09 மணியளவில் சிக்கிம் மாநிலத்தில் 3.5 என்ற ரிக்டரளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
மணிப்பூர் மாநிலத்தில் இன்று மாலை 5.32 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. மணிப்பூர் மாநிலத்தின் சுரச்சந்த்ரபூர் மாவட்டத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 5.2 ஆக ஆக பதிவாகியுள்ளது.
சுமார் 20 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நில அதிர்வு இருந்ததாக தேசிய மைய நிலநடுக்கவியல் மற்றும் புவி அறிவியல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தினால் உண்டான சேதங்கள் குறித்து இதுவரை தகவல் எதுவும் வெளியாகவில்லை. இன்று அதிகாலை 3.09 மணியளவில் சிக்கிம் மாநிலத்தில் 3.5 என்ற ரிக்டரளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.