செய்திகள்
பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்தித்து பேச அமைச்சர்களுக்கு அனுமதி மறுப்பு
பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலாவை சந்தித்து பேச அமைச்சர்களுக்கு அனுமதி கொடுக்க முடியாது என்று கர்நாடக சிறைத்துறை அதிகாரிகள் கூறி விட்டனர்.
பெங்களூரு:
சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பனஅக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
கடந்த திங்கட்கிழமை அன்று சசிகலாவை அவரது அக்காள் மகன் டி.டி.வி. தினகரன், மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், இளவரசியின் மகன் விவேக் மற்றும் மருமகள் ஆகியோர் சந்தித்து பேசினார்கள்.
பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவை சந்திக்க அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், செல்லூர் ராஜூ ஆகியோர் பெங்களூரு வந்தனர்.
அவர்கள் சிறையில் உள்ள சசிகலா, இளவரசி ஆகியோரை சந்திக்க அனுமதி கேட்டு சிறை அதிகாரியிடம் மனு கொடுத்தனர். ஆனால் அவர்களை சசிகலாவை சந்தித்து பேச அனுமதி கொடுக்க முடியாது என்று கர்நாடக சிறைத்துறை அதிகாரிகள் கூறி விட்டனர்.
சசிகலாவை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டது ஏன் என்பது குறித்து சிறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
தண்டனை கைதியை திங்கள், புதன், வெள்ளி ஆகிய 3 நாட்களில் தான் சந்திக்க முடியும். மற்ற நாட்களில் சந்திக்க அனுமதி கிடையாது. இதனால் தான் அவர்களை சிறைக்குள் சசிகலாவை சந்திக்க அனுமதிக்க மறுத்து விட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதேபோல முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, கோகுல இந்திரா, செய்தி தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி ஆகியோர் நேற்று பெங்களூரு வந்தனர். அவர்கள் சிறை வளாகத்திற்கு வந்து சசிகலா, இளவரசியை சந்திக்க மனு கொடுத்தனர்.
அவர்களும் சசிகலாவை சந்திக்க சிறை அதிகாரிகள் மறுத்து விட்டனர். இதனால் அவர்கள் 3 பேரும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
சிறையில் சுதாகரனுடன் கர்நாடக மாநில நெடுஞ்சாலை மேம்பாட்டுக் கழக முன்னாள் முதன்மை பொறியாளர் ஜெயச்சந்திரா உள்ளார். இவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ரூ.5.70 கோடிக்கு புத்தம் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை பதுக்கி வைத்திருந்ததாகவும், அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கிலும் சி.பி.ஐ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பனஅக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
கடந்த திங்கட்கிழமை அன்று சசிகலாவை அவரது அக்காள் மகன் டி.டி.வி. தினகரன், மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், இளவரசியின் மகன் விவேக் மற்றும் மருமகள் ஆகியோர் சந்தித்து பேசினார்கள்.
பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவை சந்திக்க அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், செல்லூர் ராஜூ ஆகியோர் பெங்களூரு வந்தனர்.
அவர்கள் சிறையில் உள்ள சசிகலா, இளவரசி ஆகியோரை சந்திக்க அனுமதி கேட்டு சிறை அதிகாரியிடம் மனு கொடுத்தனர். ஆனால் அவர்களை சசிகலாவை சந்தித்து பேச அனுமதி கொடுக்க முடியாது என்று கர்நாடக சிறைத்துறை அதிகாரிகள் கூறி விட்டனர்.
சசிகலாவை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டது ஏன் என்பது குறித்து சிறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
தண்டனை கைதியை திங்கள், புதன், வெள்ளி ஆகிய 3 நாட்களில் தான் சந்திக்க முடியும். மற்ற நாட்களில் சந்திக்க அனுமதி கிடையாது. இதனால் தான் அவர்களை சிறைக்குள் சசிகலாவை சந்திக்க அனுமதிக்க மறுத்து விட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதேபோல முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, கோகுல இந்திரா, செய்தி தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி ஆகியோர் நேற்று பெங்களூரு வந்தனர். அவர்கள் சிறை வளாகத்திற்கு வந்து சசிகலா, இளவரசியை சந்திக்க மனு கொடுத்தனர்.
அவர்களும் சசிகலாவை சந்திக்க சிறை அதிகாரிகள் மறுத்து விட்டனர். இதனால் அவர்கள் 3 பேரும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
சிறையில் சுதாகரனுடன் கர்நாடக மாநில நெடுஞ்சாலை மேம்பாட்டுக் கழக முன்னாள் முதன்மை பொறியாளர் ஜெயச்சந்திரா உள்ளார். இவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ரூ.5.70 கோடிக்கு புத்தம் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை பதுக்கி வைத்திருந்ததாகவும், அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கிலும் சி.பி.ஐ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.