செய்திகள்

தமிழக அரசியல் நிகழ்வில் பா.ஜனதாவுக்கு பங்கு இல்லை: நிதி மந்திரி அருண் ஜெட்லி பேச்சு

Published On 2017-02-14 22:36 GMT   |   Update On 2017-02-14 22:36 GMT
தமிழக அரசியல் நிகழ்வில் பாரதீய ஜனதா கட்சிக்கோ, மத்திய அரசுக்கோ பங்கு இல்லை என நிதி மந்திரி அருண் ஜெட்லி கூறியுள்ளார்
லக்னோ:

தமிழ்நாட்டில், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அடுத்து மாறிவரும் அரசியல் சூழல் குறித்து மத்திய நிதி மந்திரியும், பாரதீய ஜனதா மூத்த தலைவருமான அருண்ஜெட்லி, லக்னோவில் நிருபர்களிடம் பேசுகையில் கருத்து தெரிவித்தார்.

அப்போது அவர், “தமிழ்நாட்டில் சமீப காலமாக நடந்து வருகிற அரசியல் நிகழ்வுகள், அ.தி.மு.க.வின் தனிப்பட்ட விவகாரம். இந்த நிகழ்வுகளில், பாரதீய ஜனதா கட்சிக்கோ, மத்திய அரசுக்கோ பங்கு இல்லை. அவர்கள் (அ.தி.மு.க.வினர்) தங்களது தலைவரை எப்படி தேர்ந்தெடுக்கிறார்கள் என்பது அவர்களது உள்விவகாரம். அரசியல் சாசனப்படி தேவையான நடவடிக்கையை கவர்னர் எடுப்பார்” என குறிப்பிட்டார். 

Similar News