செய்திகள்

ராஜ்நாத் சிங்கை நாளை அதிமுக எம்.பி-க்கள் சந்திக்கிறார்கள்

Published On 2017-01-19 14:12 GMT   |   Update On 2017-01-19 14:12 GMT
ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை அதிமுக எம்.பி-க்கள் சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
புதுடெல்லி:

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் தமிழகத்தில் வெடித்துள்ளதை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியை இன்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தினார்.

ஆனால் தற்போது எதுவும் செய்ய முடியாது என்று பிரதமர் கைவிரித்து விட்டார். ஆனால் தமிழக அரசு செய்யும் நடவடிக்கைக்கு துணை நிற்பதாக கூறினார். 

இந்நிலையில், ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை அதிமுக எம்.பி-க்கள் சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நாளை பகல் 12 மணிக்கு இந்த சந்திப்பு நடைபெறும் என்று தெரிகிறது.

முன்னதாக ஜல்லிகட்டு குறித்து டில்லியில் மூத்த சட்ட நிபுணர்களுடன் முதல்வர் பன்னீர் செல்வம் தீவிர ஆலோசனை நடத்தினார்.

இதனையடுத்து, ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் இயற்ற தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோஹத்தி கூறியதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Similar News