செய்திகள்
பெண்ணுக்கு கத்திக்குத்து மர்பநபர் வெறிச்செயல் : மும்பையில் பயங்கரம்
மும்பையில் மர்ப நபர் ஒருவர் 29 வயது பெண்னை கத்தியால் குத்தி கொலைமுயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
மும்பை:
மும்பை மத்தியில் உள்ள ரேஸ் கோர்ஸ் அருகில் நேற்றிரவு 7.30 மணி அளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்தப் பெண் அங்குள்ள தனியார் நிறுவத்தில் வேலை செய்து வருகிறர். ஏற்கனவே விவாகரத்தான அவர், கடந்த சில மாதங்களாக 22 வயது வாலிபர் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
நேற்றிரவு 7.30 மணியளவில் அந்த வாலிபர், அந்த்ப் பெண்ணை சந்திக்க ரேஸ் கோர்ஸ் வந்துள்ளார். அப்போது, அங்கு அந்தப் பெண் வயிறு மற்றும் மார்புப்பகுதியில் பலத்த கத்திக்குத்து காயங்களுடன் மயங்கிய நிலையில் மரத்தடியில் விழுந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த வாலிபர், அந்தப்பெண்ணை அருகாமையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார்.
அபாயகட்டத்தை கடந்து பாதிக்கப்பட்ட பெண் உடல்நிலை தேறி வரும் நிலையில் மும்பை டார்டியோ காவல் நிலைய போலீசார் இச்சம்பவம் தொடர்பாக கொலைமுயற்சி குற்றப்பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்து, புலன் விசாரனை நடத்தி வருகின்றனர்.