செய்திகள்

மேல்சபை எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார் மிதுன் சக்ரபோர்தி

Published On 2016-12-26 11:30 GMT   |   Update On 2016-12-26 11:30 GMT
நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறிய மிதுன் சக்ரபோர்தி தனது மேல்சபை எம்.பி. பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
நடிகராக இருந்து அரசியலுக்கு வந்தவர் மிதுன் சக்ரபோர்தி. இவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் கடந்த 2014-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மேல்சபை எம்.பி. ஆக பதவி ஏற்றார். தற்போது அந்த பதவியை அவர் ராஜினாமா செய்துள்ளார். ராஜானாமா கடிதத்தை மேல்சபை சேர்மனிடம் அளித்துள்ளார்.

தனது உடல்நிலையை காரணம் காட்டி இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மேற்கு வங்காளத்தை உலுக்கிய சாரதா முறைகேடு வழக்கில் இவர் பெயர் அடிபட்டது.

தனது பதவிக் காலத்தில் மூன்று நாட்கள் மட்டுமே மேல்சபை கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News