செய்திகள்
காஷ்மீரில் துப்பாக்கி சண்டை: 3 தீவிரவாதிகள் பலி
காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் 6 மணி நேரம் நடந்த துப்பாக்கி சண்டையில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
ஸ்ரீநகர்:
காஷ்மீரில் அனந்தநாக் மாவட்டத்தில் தீவிரவாதிகள் ஊடுருவியதாக தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து பிஜ் பெகாராவில் உள்ள அர்வானி என்ற இடத்தில் ராணுவ வீரர்கள் தீவிரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது ராணுவத்தினரை நோக்கி தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு ராணுவத்தினரும் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதனால் இரு தரப்பினருக்கு இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. நேற்று சுமார் 6 மணி நேரம் நடந்த இந்த துப்பாக்கி சண்டையில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். துப்பாக்கி சண்டை நடைபெற்ற இடத்தில் இடிபாடுகளுக்குள் அவர்களின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அதே பகுதியில் கல்வீசி தாக்குதல் நடத்திய போராட்டக்காரர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்குமிடையே ஏற்பட்ட மோதலில் சேர்ந்த ஒருவர் பலியானார்.
காஷ்மீரில் அனந்தநாக் மாவட்டத்தில் தீவிரவாதிகள் ஊடுருவியதாக தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து பிஜ் பெகாராவில் உள்ள அர்வானி என்ற இடத்தில் ராணுவ வீரர்கள் தீவிரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது ராணுவத்தினரை நோக்கி தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு ராணுவத்தினரும் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதனால் இரு தரப்பினருக்கு இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. நேற்று சுமார் 6 மணி நேரம் நடந்த இந்த துப்பாக்கி சண்டையில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். துப்பாக்கி சண்டை நடைபெற்ற இடத்தில் இடிபாடுகளுக்குள் அவர்களின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அதே பகுதியில் கல்வீசி தாக்குதல் நடத்திய போராட்டக்காரர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்குமிடையே ஏற்பட்ட மோதலில் சேர்ந்த ஒருவர் பலியானார்.