செய்திகள்

ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் மும்பை வாலிபர்: தீவிரவாத எதிர்ப்பு பிரிவு தகவல்

Published On 2016-12-09 08:10 GMT   |   Update On 2016-12-09 08:11 GMT
ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் தானே மாவட்டத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் சேர்ந்துள்ளதாக தீவிரவாத எதிர்ப்பு பிரிவு தகவல் தெரிவித்துள்ளது.
மும்பை:

மும்பை அருகேயுள்ள தானே மாவட்டத்தில் உள்ள மும்ராவை சேர்ந்தவர் தப்ரேஜ் நூர் முகமது தாம்பே (28). இவர் இந்தியாவில் இருந்து வெளியேறி எகிப்து மற்றும் லிபியாவுக்கு சென்றார்.

தற்போது அவர் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் இணைந்துவிட்டதாக நம்பப்படுகிறது. இவருடன் அவரது நண்பர் அலியும் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் இணைந்துள்ளார்.

இவர் சவுதி அரேபியாவை சேர்ந்தவர். சில ஆண்டுகளுக்கு முன்பு தப்ரேஜ் ரியாத்தில் பணிபுரிந்தார். அப்போது அலியுடன் பழக்கம் ஏற்பட்டு நண்பரானார். அதை தொடர்ந்து அவருடன் பழக்கம் ஏற்பட்டு ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்துள்ளார். இத்தகவலை தீவிரவாத எதிர்ப்பு பிரிவு தெரிவித்துள்ளது. தப்ரேஜ் மீது வழக்கு பதிவு செய்துள்ளது.

ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆதரவாளர்கள் 68 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கடந்த மாதம் பாராளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அதே நேரத்தில் உள்துறை துணை மந்திரி ஹன்ஸ்ராஜ் அகிர் கூறும் போது இந்த ஆண்டு மட்டும் 50 பேர் கைது செய்யப்பட்டதாகவும் அவர்களில் 11 பேர் மராட்டியத்தை சேர்ந்தவர்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

Similar News