செய்திகள்
அனந்னாக்கில் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக்கொலை: ராணுவம் நடவடிக்கை
அனந்னாக்கில் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான்.
பாகிஸ்தானில் இருந்து இருநாட்டு எல்லை வழியாக இந்தியாவின் ஜம்மு- காஷ்மீருக்குள் நுழையும் தீவிரவாதிகள் இந்திய ராணுவ முகாம் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறார்கள். பதான்கோட், உரி தாக்குதலுக்குப்பின் நேற்று முன்தினம் நக்ரோட்டாவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 7 ராணுவ வீரர்கள் பலியானார்கள்.
அம்மாநிலத்தில் தீவிரவாதிகளுக்கு எதிரான ஆபரேஷன் என்பதன் மூலம் ராணுவ மற்றும் உள்ளூர் போலீசார்கள் பயங்கரவாதிகளை சல்லடை போட்டி தேடிவருகின்றன.
இந்நிலையில் அனந்னாக் மாவட்டம் டூரு பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக தகவல் வந்தது. இதன்அடிப்படையில் அந்த இடத்திற்குச் சென்ற வீரர்கள் பங்கரவாதி ஒருவனை சுட்டுக் கொன்றனர்.
அம்மாநிலத்தில் தீவிரவாதிகளுக்கு எதிரான ஆபரேஷன் என்பதன் மூலம் ராணுவ மற்றும் உள்ளூர் போலீசார்கள் பயங்கரவாதிகளை சல்லடை போட்டி தேடிவருகின்றன.
இந்நிலையில் அனந்னாக் மாவட்டம் டூரு பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக தகவல் வந்தது. இதன்அடிப்படையில் அந்த இடத்திற்குச் சென்ற வீரர்கள் பங்கரவாதி ஒருவனை சுட்டுக் கொன்றனர்.