செய்திகள்

வங்காளதேசத்துடன் ராணுவம் - பாதுகாப்பு உறவுகள்: மனோகர் பாரிக்கர் பேச்சுவார்த்தை

Published On 2016-11-30 15:14 GMT   |   Update On 2016-11-30 15:14 GMT
வங்காள தேசத்துடன் ராணுவம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பாக பாதுகாப்புத் துறை மந்திரி மனோகர் பாரிக்கர் இன்று பேச்சுவார்த்தை நடத்தினார்.
டாக்கா:

இந்திய பாதுகாப்புத்துறை மந்திரி மனோகர் பாரிக்கர் வங்காள தேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவருடன் 11 பேர் கொண்ட உயர்மட்டக் குழுவும் சென்றுள்ளது. இரண்டு நாள் பயணத்தின் முதல் நாளான இன்று பாதுகாப்புத்துறை மந்திரி மனோகர் பாரிக்கர், வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனாவின் பாதுகாப்பு ஆலோசகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) தாரிக் அகமதை சந்தித்தார்.

இந்த சந்திப்பின்போது, இரு நாட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது, ராணுவம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து ஆலோசனை நடத்தினர். நாளை சிட்டகாங்கில் உள்ள வங்காளதேச ராணுவ அகாடமியை பார்வையிடுகிறார். அரசின் உயர் அதிகாரிகள் மற்றும் ராணுவ அதிகாரிகளை சந்திக்க உள்ளார்.

கடந்த 45 ஆண்டுகளில் வங்காளதேசத்திற்கு பயணம் மேற்கொள்ளும் முதல் இந்திய பாதுகாப்பு மந்திரி மனோகர் பாரிக்கர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News