செய்திகள்

ஒடிசா: ஜப்பான் மூளையழற்சி நோயால் மேலும் 3 குழந்தைகள் உயிரிழப்பு - பலி எண்ணிக்கை 61 ஆனது

Published On 2016-10-23 07:33 GMT   |   Update On 2016-10-23 07:33 GMT
ஒடிசா மாநிலத்தின் மல்காங்கிரி மாவட்டத்தில் ஜப்பான் மூளையழற்சி நோயால் மேலும் மூன்று குழந்தைகள் உயிரிழந்ததையடுத்து கடந்த ஆறுவாரங்களில் இந்நோய்க்கு பலியானோரின் எண்ணிக்கை 63 ஆக உயர்ந்துள்ளது.
புவனேஸ்வர்:

ஒடிசா மாநிலத்தின் மல்காங்கிரி மாவட்டத்தை சுற்றியுள்ள சுமார் 100 கிராமங்களில் ஜப்பான் மூளையழற்சி எனப்படும் மூளைவீக்க நோய் படுவேகமாக பரவி வருகிறது.

பன்றிகளிடம் இருந்து கொசுக்களின் மூலம் பரவும் இந்நோய் குறிப்பாக, சிறுகுழந்தைகளை வெகுவாக தாக்குகிறது. இந்நிலையில், ஜப்பான் மூளையழற்சி நோயால் பாதிக்கப்பட்டு மல்காங்கிரி மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த மூன்று குழந்தைகள் சிகிச்சை பலனின்றி, நேற்று பரிதாபமாக உயிரிழந்தன.

இதையடுத்து, கடந்த ஆறுவாரங்களில் இந்நோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது.

Similar News