செய்திகள்
பறவைகள் உயிரிழப்பை தொடர்ந்து குவாலியர் உயிரியல் பூங்கா மூடல்
மத்திய பிரதேசம், குவாலியர் காந்தி உயிரியல் பூங்காவில் கடந்த 3 நாட்களில் 15 பறவைகள் உயிரழந்துள்ளதால், பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
புதுடில்லி:
பறவைக்காய்ச்சல் நோய் தாக்குதல் காரணமாக ஏராளமான் பறவைகள் உயிரிழந்ததால் குவாலியர் மிருககாட்சி சாலை தற்காலிகமாக மூடப்பட்டது.
மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் மாவட்டத்தில் உள்ள உள்ளூர் காந்தி உயிரியல் பூங்காவில் கடந்த 3 நாட்களில் 15 பறவைகள் உயிரழந்துள்ளன.
எச்5என்8 என்ற புதிய வைரஸ் நோய் தாக்கி 15 பறவைகள் உயிரிழந்ததாக மிருககாட்சி சாலை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. இது அதிகாரிகள் இடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
இதனால், குவாலியர் உயிரியல் பூங்கா அடுத்த உத்தரவு வரும் வரை மூடப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னதாக, இதே போல் தலைநகர் புதுடில்லியில் உள்ள வன உயிரியல் பூங்காவும் பறவைக்காய்ச்சல் எதிரொலி காரணமாக நான்கு நாட்களாக மூடப்பட்டுள்ளது.
பறவைக்காய்ச்சல் நோய் தாக்குதல் காரணமாக ஏராளமான் பறவைகள் உயிரிழந்ததால் குவாலியர் மிருககாட்சி சாலை தற்காலிகமாக மூடப்பட்டது.
மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் மாவட்டத்தில் உள்ள உள்ளூர் காந்தி உயிரியல் பூங்காவில் கடந்த 3 நாட்களில் 15 பறவைகள் உயிரழந்துள்ளன.
எச்5என்8 என்ற புதிய வைரஸ் நோய் தாக்கி 15 பறவைகள் உயிரிழந்ததாக மிருககாட்சி சாலை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. இது அதிகாரிகள் இடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
இதனால், குவாலியர் உயிரியல் பூங்கா அடுத்த உத்தரவு வரும் வரை மூடப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னதாக, இதே போல் தலைநகர் புதுடில்லியில் உள்ள வன உயிரியல் பூங்காவும் பறவைக்காய்ச்சல் எதிரொலி காரணமாக நான்கு நாட்களாக மூடப்பட்டுள்ளது.