செய்திகள்

எல்லையில் தொடர்ந்து அத்துமீறல்: பாகிஸ்தான் தாக்குதலில் இந்திய வீரர் காயம்

Published On 2016-10-21 08:33 GMT   |   Update On 2016-10-21 08:33 GMT
எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் இந்திய வீரர் காயம் அடைந்தார்.
புதுடெல்லி:

இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ளது. இதை மீறும் வகையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து எல்லையில் அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறது.

சர்ஜிகல் தாக்குதலுக்குப் பின் பாகிஸ்தான் நாள்தோறும் அத்துமீறி தாக்கி வருகிறது. இந்தியாவும் தக்க பதிலடி கொடுத்தது. இன்று அதிகாலை மீண்டும் தாக்குதலில் ஈடுபட்டது. காஷ்மீரின் கத்துவா பகுதியில் ஹீரா நகர் செக்டரில் பாகிஸ்தான் படைகள் துப்பாக்கியாலும், மோர்டர் ரக குண்டுகளை வீசியும் தாக்கியது.

இதில் இந்திய எல்லைப் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் காயம் அடைந்தார். உடனே இந்தியப்படைகள் திருப்பி தாக்கியது. உடனே பாகிஸ்தான் படைகள் பின்வாங்கின.

Similar News