செய்திகள்

பீகாரில் வாகன சோதனையின்போது 76 கிலோ வெள்ளி பறிமுதல்

Published On 2016-10-20 14:34 GMT   |   Update On 2016-10-20 14:34 GMT
வாகன சோதனையின்போது 76 கிலோ வெள்ளியை பீகார் போலீசார் இன்று பறிமுதல் செய்தனர்.
பீகார்:

பீகார் மாநிலம் பகல்பூர் மாவட்டத்தில் போலீசார் இன்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அந்த வழியாக சென்ற வாகனம் ஒன்றை வழிமறித்து போலீசார் சோதனை செய்தபோது 76 கிலோ எடையுள்ள வெள்ளி நகைகள் அந்த வாகனத்தில் இருந்தது கண்டறியப்பட்டது.

நகைகள் குறித்து போலீசார் வாகனத்தின் உரிமையாளர் வீரேந்திர பிரசாத் மற்றும் அவரது டிரைவர் ராமகாந்த் தாகூர் இருவரிடமும் விசாரித்தபோது அவர்கள் இருவரும் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர்.

நகைகளுக்கான உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாததாலும் விசாரணையில் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்ததாலும் அவர்கள் இருவரையும் கைது செய்து பகல்பூர் போலீசார்  நகைகள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Similar News