செய்திகள்

பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்திய இந்திய வீரர்களுக்கு ராணுவ மந்திரி வாழ்த்து

Published On 2016-09-29 23:00 GMT   |   Update On 2016-09-29 23:01 GMT
பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்திய இந்திய ராணுவ வீரர்களுக்கு மத்திய ராணுவ மந்திரி மனோகர் பாரிக்கர் பாராட்டு தெரிவித்து உள்ளார்.
புதுடெல்லி:

பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்திய இந்திய ராணுவ வீரர்களுக்கு மத்திய ராணுவ மந்திரி மனோகர் பாரிக்கர் பாராட்டு தெரிவித்து உள்ளார். இதுகுறித்து டுவிட்டர் சமூக வலைதளத்தில், ‘இந்திய ராணுவத்தின் வெற்றிகரமான தாக்குதலுக்கு பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டு உள்ளார்.

மந்திரி மனோகர் பாரிக்கர் மற்றும் ராணுவ தளபதி தல்பீர் சிங் கண்காணிப்பிலேயே பாகிஸ்தான் மீதான தாக்குதல் நடந்துள்ளது. உரி தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்று ஏற்கனவே மனோகர் பாரிக்கர் கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.

Similar News