செய்திகள்

சோனியா காந்தியுடன் சுஷ்மா சுவராஜ் சந்திப்பு: ராணுவ நடவடிக்கை சூழ்நிலையை விளக்கினார்

Published On 2016-09-29 22:12 GMT   |   Update On 2016-09-29 22:12 GMT
சோனியா காந்தியுடன் சுஷ்மா சுவராஜ் சந்தித்து ராணுவ நடவடிக்கை சூழ்நிலை குறித்து விளக்கியதாக கூறப்படுகிறது.
புதுடெல்லி:

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் பயங்கரவாதிகளின் தளங்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இந்த நடவடிக்கையை முன்னிட்டு உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் அனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்து இருந்தார்.

இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள செல்லும் முன்பு மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வீட்டுக்கு சென்று அவரை சந்தித்து பேசினார். அப்போது சுஷ்மா சுவராஜ், ராணுவ நடவடிக்கையையொட்டி ஏற்பட்டுள்ள சூழ்நிலை குறித்து விளக்கியதாக கூறப்படுகிறது.

Similar News