செய்திகள்
ஆம்ஆத்மி தொண்டரை சுட்டு கொன்ற அகாலிதளம் தலைவர்
பஞ்சாப் அருகே நிலம் தொடர்பான பிரச்சினையில் ஆம்ஆத்மி தொண்டரை அகாலிதளம் தலைவர் சுட்டு கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
அமிர்தசரஸ்:
பஞ்சாப் அருகே உள்ள மோகா அருகே உள்ள பைந்தர்கலாம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் ஜக்சீர்சிங். இவர் அகாலிதளம் கட்சியில் அந்த பகுதி தலைவராக இருந்து வருகிறார். முன்னாள் பஞ்சாயத்து தலைவராகவும் இருந்துள்ளார்.
இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஆம்ஆத்மி கட்சியை சேர்ந்த ஜகரூப்சிங்குக்கும் இடையே நிலம் தொடர்பான பிரச்சினை நீண்ட நாட்களாக இருந்து வந்தது.
இந்த நிலையில் ஜகரூப்சிங் நிலத்தை ஜக்சீர்சிங் மீண்டும் ஆக்கிரமித்தார். இதை ஜகரூப்சிங் தட்டிக்கேட்டார். இதனால் இருவருக்கும் இடையே கடும் தகராறு ஏற்பட்டது.
இந்த நேரத்தில் ஜக்சீர்சிங் தனது துப்பாக்கியை எடுத்து ஜகரூப்சிங்கை சுட்டார். இதில் அந்த இடத்திலேயே அவர் உயிரிழந்தார். அருகில் இருந்த மற்றொரு நபருக்கு காயம் ஏற்பட்டது.
இந்த சம்பவத்தை அடுத்து ஜக்சீர்சிங் தப்பி ஓடிவிட்டார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடிவருகிறார்கள்.
பஞ்சாப் அருகே உள்ள மோகா அருகே உள்ள பைந்தர்கலாம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் ஜக்சீர்சிங். இவர் அகாலிதளம் கட்சியில் அந்த பகுதி தலைவராக இருந்து வருகிறார். முன்னாள் பஞ்சாயத்து தலைவராகவும் இருந்துள்ளார்.
இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஆம்ஆத்மி கட்சியை சேர்ந்த ஜகரூப்சிங்குக்கும் இடையே நிலம் தொடர்பான பிரச்சினை நீண்ட நாட்களாக இருந்து வந்தது.
இந்த நிலையில் ஜகரூப்சிங் நிலத்தை ஜக்சீர்சிங் மீண்டும் ஆக்கிரமித்தார். இதை ஜகரூப்சிங் தட்டிக்கேட்டார். இதனால் இருவருக்கும் இடையே கடும் தகராறு ஏற்பட்டது.
இந்த நேரத்தில் ஜக்சீர்சிங் தனது துப்பாக்கியை எடுத்து ஜகரூப்சிங்கை சுட்டார். இதில் அந்த இடத்திலேயே அவர் உயிரிழந்தார். அருகில் இருந்த மற்றொரு நபருக்கு காயம் ஏற்பட்டது.
இந்த சம்பவத்தை அடுத்து ஜக்சீர்சிங் தப்பி ஓடிவிட்டார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடிவருகிறார்கள்.