செய்திகள்

மத்திய பிரதேசத்தில் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் சிறுமி உள்பட 3 பேர் பலி- 13 பேர் காயம்

Published On 2016-09-25 13:07 GMT   |   Update On 2016-09-26 00:48 GMT
மத்திய பிரதேசத்தில் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் ஐந்து வயது சிறுமி உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சட்டார்பூர்:

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள தமோஹ் மாவட்டத்தின் அருகிலுள்ள கிராமங்களைச் சேர்ந்த தொழிலாளிகள் கட்டுமான வேலைக்காக பஜாவார் காவல்நிலையத்திற்கு உட்படட மைத்னிபூரா கிராமத்திற்கு சென்றிருந்தனர். அப்போது பாபு பாண்டே என்பவர் வீட்டின் சுவர் அருகே ஓலை வீடி கட்டி தங்கியிருந்தனர்.

அவர்கள் தூங்கிக்கொண்டிருக்கும்போது அந்த சுவர் திடீரென அவர்கள் மீது இடிந்து விழுந்தது. இதில் சிக்கி்கொண்ட கவுசல் ராணி, லட்சுமி மற்றும் அன்சு என்ற ஐந்து வயது சிறுமி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 13 பேர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்த அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ஒருவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.

இத்தகவல் அறிந்த மாவட்ட கலெக்டர் காயம் அடைந்தவர்களை மருத்துவமனையில் சென்று பார்வையிட்டு அவர்களுக்கு தேவையான உதவிகள் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

Similar News