செய்திகள்

தேசிய பாதுகாப்புப் படை புதிய தலைவராக சுதிர் பிரதாப் சிங் நியமனம்

Published On 2016-09-23 22:01 GMT   |   Update On 2016-09-23 22:01 GMT
மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி சுதிர் பிரதாப் சிங் தேசிய பாதுகாப்பு படையின் புதிய தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
புதுடெல்லி:

தேசிய பாதுகாப்பு படையின் புதிய தலைவராக மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி சுதிர் பிரதாப் சிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அதேபோல் தேசிய பாதுகாப்பு படையின் தீவிரவாத ஒழிப்பு பிரிவு மற்றும் மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படை பொது மேலாளராக ஓ.பி.சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.

தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு படையினர் பொது மேலாளராக ஓ.பி.சிங் பணி புரிந்து வந்தார். அந்த இடத்திற்கு மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி ஆர்.கே.பச் நந்தா நியமிக்கப்பட்டுள்ளார்.

பச் நந்தா தற்போது த்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படையின் கூடுதல் பொது இயக்குநராக இருந்து வந்தார்.

Similar News