செய்திகள்
காஷ்மீர் மக்களுக்கு பாகிஸ்தான் தொடர்ந்து ஆதரவு அளிக்கும்: பாக். ராணுவ தளபதி ரஹீல்
காஷ்மீர் மக்களுக்கு பாகிஸ்தான் தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என்று அந்நாட்டின் ராணுவ தளபதி ரஹீல் ஷரிப் தெரிவித்துள்ளார்.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரில் உள்ள தலைமை ராணுவ அலுவலகத்தில் அந்நாட்டின் பாதுகாப்பு தின நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் ரஹீல் ஷரிப் பேசியதாவது:-
சுயாட்சி உரிமைக்காக போராடி உயிர் நீர்த்து பெரும் தியாகம் செய்த காஷ்மீர் மக்களை நாங்கள் தலை வணங்குகிறோம். இந்த பிரச்சனைக்கு தீர்வு ஐ.நா. முன் மொழிந்துள்ள தீர்மானங்களை அமல்படுத்துவது தான்.
தூதரக மற்றும் ஒழுங்குநெறி அடிப்படையில் பாகிஸ்தான் தொடர்ந்து காஷ்மீர் மக்களுக்கு ஆதரவு அளிக்கும். பாகிஸ்தானின் பாதுகாப்பு வெல்லமுடியாத அளவில் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரில் உள்ள தலைமை ராணுவ அலுவலகத்தில் அந்நாட்டின் பாதுகாப்பு தின நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் ரஹீல் ஷரிப் பேசியதாவது:-
சுயாட்சி உரிமைக்காக போராடி உயிர் நீர்த்து பெரும் தியாகம் செய்த காஷ்மீர் மக்களை நாங்கள் தலை வணங்குகிறோம். இந்த பிரச்சனைக்கு தீர்வு ஐ.நா. முன் மொழிந்துள்ள தீர்மானங்களை அமல்படுத்துவது தான்.
தூதரக மற்றும் ஒழுங்குநெறி அடிப்படையில் பாகிஸ்தான் தொடர்ந்து காஷ்மீர் மக்களுக்கு ஆதரவு அளிக்கும். பாகிஸ்தானின் பாதுகாப்பு வெல்லமுடியாத அளவில் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.