செய்திகள்
குடிநீர் பாட்டில்

ஒரு பாட்டில் குடிநீர் விலை இவ்வளவா?

Published On 2021-11-18 05:11 GMT   |   Update On 2021-11-18 05:11 GMT
நீட்டா அம்பானி குடிக்கும் குடிநீரின் விலை குறித்து சமூக வலைதளங்களில் வைரலாகும் தகவல் பற்றி பார்ப்போம்.


ரிலையன்ஸ் பவுண்டேஷன் தலைவர் நீட்டா அம்பானியின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இவர் உலகின் விலை உயர்ந்த குடிநீரை குடிப்பதாக வைரல் பதிவுகளில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 

ஜூலை 6, 2021 ஆம் ஆண்டு வெளியான ஜி.கியூ. இந்தியா அறிக்கையின் படி 'அக்வா டி க்ரிஸ்டாலோ டிரிபியூடோ அ மோடிகிலானி' என்ற பெயர் கொண்ட குடிநீர் பாட்டில் ஒன்றின் விலை ரூ. 44.5 லட்சம் ஆகும். இது 2010 ஆம் ஆண்டு உலகின் விலை உயர்ந்த குடிநீர் என கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது. 



நீட்டா அம்பானி உலகின் விலை உயர்ந்த குடிநீரை குடிக்கிறார். இதன் விலை ஒரு பாட்டிலுக்கு ரூ. 40 லட்சம் ஆகும். தன்னை ஆரோக்கியமாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்துக் கொள்ள நீட்டா அம்பானி குடிக்கும் நீர் 750 மில்லி லிட்டர் விலை ரூ. 40 லட்சம் ஆகும். என வைரல் பதிவுகளில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

வைரல் புகைப்படத்தை ஆய்வு செய்ததில், அது எடிட் செய்யப்பட்ட புகைப்படம் என தெரியவந்துள்ளது. உண்மையில் நீட்டா அம்பானி பிளாஸ்டிக் பாட்டில் குடிநீரையே குடிக்கிறார். இதன் அசல் புகைப்படம் இணையத்தில் கிடைக்கிறது. உண்மையில் உலகின் விலை உயர்ந்த குடிநீர் இந்திய மதிப்பில் ரூ. 39.40 லட்சம் விலைக்கு 2010 ஆம் ஆண்டு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது.

Tags:    

Similar News