உள்ளூர் செய்திகள்
உலக தாய்ப்பால் வார விழா விழிப்புணர்வு பேரணி
- பேரணியை மாவட்ட கலெக்டர் சாந்தி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
- அங்கன்வாடி பணியாளர்கள் விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டனர்.
தருமபுரி,
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் தருமபுரி மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் உலக தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு இன்று தருமபுரி கலெக்டர் அலுவலகத்தில் நர்சிங் கல்லூரி மாணவிகள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் பங்குபெற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இந்தப் பேரணியை மாவட்ட கலெக்டர் சாந்தி கொடியசைத்து துவக்கி வைத்தார். பேரணியானது கலெக்டர் அலுவலகத்தில் இருந்து இலக்கியம்பட்டி, பாரதிபுரம் வரை சென்று முடிவடைந்தது.