உள்ளூர் செய்திகள்
குடிப்பழக்கத்தால் தொழிலாளி தற்கொலை
- குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி தனது சொத்துக்கள் முழுவதையும் இழந்த தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
- ராஜதானி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வருசநாடு:
ராஜதானி அருகே உள்ள கே.காமாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் பாண்டி (வயது 43).
இவர் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி தனது சொத்துக்கள் முழுவதையும் விற்று பொறுப்பில்லாமல் சுற்றி வந்தார்.
மனைவி மற்றும் குழந்தைகள் இல்லாத நிலையில் தனிமையில் வசித்து வந்த பாண்டி மனம் வெறுத்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
ராஜதானி போலீசார் விசாரித்து வருகின்றனர்.