உள்ளூர் செய்திகள்

கார் மீது லாரி மோதி பெண் பலி; 3 பேர் படுகாயம்

Published On 2023-08-08 10:05 GMT   |   Update On 2023-08-08 10:05 GMT
  • பின்னால் வந்த லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக கார் மீது மோதியது.
  • 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் மேகநாதன் (வயது 43).

இவர் தனது மனைவி வெண்ணிலா (40), உறவினர்கள் நடராஜன், ரஞ்சிதா ஆகியோருடன் காரில் வீட்டிலிருந்து தஞ்சை நோக்கி புறப்பட்டார்.

காரை மேகநாதன் ஒட்டி வந்தார்.

அந்த கார் தஞ்சை- பட்டுக்கோட்டை புறவழிச் சாலையில் வந்து கொண்டி ருந்தது.

அப்போது பின்னால் வந்த லாரி ஒன்று எதிர்பாராத விதமாக கார் மீது மோதியது.

இந்த விபத்தில் வெண்ணிலா சம்பவ இடத்திலேயே பலியானார்.

மேகநாதன், நடராஜன், ரஞ்சிதா ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்த மேகநாதன் உள்பட 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News