உள்ளூர் செய்திகள்

தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

Published On 2023-01-07 08:33 GMT   |   Update On 2023-01-07 08:33 GMT
  • தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 28-ந்தேதி நடக்கிறது.
  • 8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ., டிப்ளமோ ஆகிய கல்வி தகுதி உடையவர்களை தேர்வு செய்ய உள்ளார்கள்.

விருதுநகர்

விருதுநகர் மாவட்ட நிர்வாகம் மற்றும் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் அருப்புக்கோட்டையில் உள்ள எஸ்.பி.கே. கலை மற்றும் அறிவியல் கல்லூரி யில் வருகிற 28-ந் தேதி தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது.

இந்த முகாமில் 100-க் கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு 8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ., டிப்ளமோ ஆகிய கல்வி தகுதி உடைய வர்களை தேர்வு செய்ய உள்ளார்கள்.

தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் நேர்காணலில் கலந்து கொள்ள வேலைவாய்ப்பு அடையாள அட்டை, அனைத்து கல்விச்சான்று களின் நகல் மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றுடன் வருகிற 28-ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 3 மணிவரை கலந்து கொண்டு பயன்பெறலாம்.

இந்த முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள வேலைநாடுநர்கள் மற்றும் வேலையளிப்போர் ஆகியோர் www.vnrjobfair.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.

தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் மூலம் பணி நியமனம் பெற்றவர்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு எவ்விதத்திலும் பாதிக்கப்பட மாட்டாது என கலெக்டர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News