உள்ளூர் செய்திகள்

போலீஸ்காரர் மனைவி-கல்லூரி மாணவி மாயம்

Published On 2023-01-30 06:47 GMT   |   Update On 2023-01-30 06:47 GMT
  • போலீஸ்காரர் மனைவி-கல்லூரி மாணவி மாயமானார்கள்.
  • இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

விருதுநகர்

விருதுநகர் மாவட்டம் வத்திரா யிருப்பு அருகே உள்ள சேதுநாராய ணபுரத்தை சேர்ந்தவர் வேலுச்சாமி. இவரது மகள் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி யில் நர்சாக பணியாற்றி வந்தார். அப்போது சேலத்தை சேர்ந்த போலீஸ்காரர் சந்தோஷ்குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்கள் சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி யில் குடும்பம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த பெண் சேதுநாராயணபுரத்தில் உள்ள தாய் வீட்டுக்கு வந்து விட்டார்.

சம்பவத்தன்று வீட்டில் இருந்த அவர் திடீரென மாயமானார். வத்திரா யிருப்பு போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

கல்லூரி மாணவி

சிவகாசி அருகே உள்ள போதுரெட்டியபட்டியை சேர்ந்த 20 வயதுடைய மாணவி சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்றார். அதன் பிறகு அவர் வீடு திரும்ப வில்லை. பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடிய வில்லை.

இதுகுறித்து அவரது தாய் கொடுத்த புகாரின்பேரில் மாரநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

இளம்பெண்

திருச்சுழி சேதுபுரத்தை சேர்ந்தவர் லதா. இவரது மகள் கற்பகவள்ளி. இவர் அடிக்கடி செல்போன் பயன்படுத்தி வந்ததால் குடும்பத்தினர் கண்டித்தனர்.

இதனால் விரக்தியடைந்த கற்பகவள்ளி திடீரென மாயமானார். இதுகுறித்து திருச்சுழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மகளுடன் மாயம்

ஸ்ரீவில்லிபுத்தூர் கம்மா பட்டியை சேர்ந்தவர் ராம மூர்த்தி. இவரது மனைவி நாகரத்தினம். இவர்களுக்கு ஒரு மகள் உண்டு. கடந்த சில வாரங்களாக கணவன்-மனைவி இடையே பிரச்சினை ஏற்பட்டது. சம்பவத்தன்று நாகரத்தினம் தனது மகளுடன் மாய மானார்.

இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News