உள்ளூர் செய்திகள்

குறைந்தபட்ச ஊதியம் வழங்காத 17 கடைகள்-நிறுவனங்கள் மீது நடவடிக்கை

Published On 2023-04-04 08:28 GMT   |   Update On 2023-04-04 08:28 GMT
  • விருதுநகர் மாவட்டத்தில் குறைந்தபட்ச ஊதியம் வழங்காத 17 கடைகள்-நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
  • தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) காளிதாஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.

விருதுநகர்

விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) காளிதாஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை தொழிலாளர் ஆணையர் அதுல்ஆனந்த் ஆணையின்படி கடைகள் மற்றும் வர்த்தக நிறுவ னங்களில் குறிப்பாக தனியார் நிதி நிறுவனங்கள், மருந்து கடைகள், ஸ்கேன் ைமயங்கள், ஸார்டுவேர் கடைகள், பரிசோதனை மையங்கள், கால் சென்டர்கள் உள்ளிட்ட நிறுவனங்க ளில் குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின் கீழ் ஆய்வுகள் மேற்கொள்ள உத்தரவிடப் பட்டது.

அதன்படி இந்த கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் குறைந்தபட்ச கூலி சட்டத்தின் கீழ் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதில், தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்காத 17 நிறுவனங்கள் மீது முரண்பாடு கண்டறியப்பட்டது. 17 நிறுவனங்கள் மீது மதுரை தொழிலாளர் இணை ஆணையர் நீதிமன்றத்தில் கேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டு, 17 நிறுவனங்களில் பணிபுரிந்த 35 தொழிலாளர்களுக்கு குறைவுச்சம்பளம் ரூ.9லட்சத்து 66ஆயிரத்து 56-ஐ பெற்று வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அனைத்து நிறுவனங்களும் குறைந்த பட்ச கூலிச் சட்டத்தின் கீழ் அந்தந்த தொழில் நிறுவனங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச ஊதியத்தை (ஊதியம் மற்றும் அகவிலைப்படி) அளிக்க வேண்டும். குறைவு ஊதியம் தொடர்பான புகார் தெரிவிக்க 04562-225130 என்ற விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) அலுவலக தொலைபேசி எண்ணை அலுவலக வேலை நேரத்தில் தொடர்பு கொள்ளலாம். இந்த ஆய்வில் விருதுநகர், அருப்புக்கோட்டை, சிவகாசி முதல் மற்றும் 2-ம் சரகம், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், உசிலம்பட்டி தொழிலாளர் உதவி ஆய்வர்கள் பங்கேற்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News