உள்ளூர் செய்திகள்

விநாயகர் சதுர்த்தி விழா நடத்துவது குறித்து இந்து முன்னணி சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

வேலூரில் இந்து முன்னணி சார்பில் 508 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

Published On 2022-08-21 09:32 GMT   |   Update On 2022-08-21 09:32 GMT
  • ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு
  • 2-ந்தேதி சிலை ஊர்வலம்

வேலூர்:

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் வேலூர் ரங்கா புரத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு கோட்ட பொருளாளர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். மாநகர செயலாளர் ஆதிமோகன், வேல்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கோட்டத் தலைவர் மகேஷ் கலந்து கொண்டு விழா குறித்து பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நாடு முழுவதும் வருகிற 31ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் விநாயகர் சிலை வைக்க 22 வகையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. கட்டுப்பாடுகள் அனைத்தையும் தளர்த்த வேண்டும். சிலை வைக்க பல்வேறு துறைகளில் அனுமதி பெற வேண்டி உள்ளதால் பலர் சிரமத்தில் உள்ளனர். எனவே ஒற்றை சாளர முறையில் அனுமதி வழங்க வேண்டும்.

508 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

வேலூர் பெருங்கோட்டத்தில் 23 இடங்களில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற உள்ளது. வேலூர் திருப்பத்தூர் ராணிப்பேட்டை ஆகிய மூன்று மாவட்டங்களில் 1008 இடங்களில் சிலை வைக்கப்பட உள்ளது.வேலூர் மாவட்டத்தில் மட்டும் 508 சிலைகள் அமைக்கப்படுகிறது.

வேலூரில் செப்டம்பர் 2- தேதி சிலை ஊர்வலம் நடைபெற உள்ளது. வேலூர் கலெக்டர் அலுவலக ஆஞ்சநேயர் கோவிலில் இருந்து ஊர்வலம் தொடங்குகிறது.

மாநில செயலாளர் மனோகர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்ள உள்ளார். ஆஞ்சநேயர் கோவிலில் இருந்து புறப்படும் ஊர்வலம் காககிதப்பட்டறை, சைதாப்பேட்டை, மெயின் பஜார், லாங்கு பஜார், கமிஷனரி ரோடு, கோட்டை சுற்றுசாலை வழியாக செல்கிறது. அதேபோல கொணவட்டத்திலும் இருந்து ஊர்வலம் செல்கிறது. சிலைகள் சதுப்பேரி ஏரியில் கரைக்கப்பட உள்ளது.

இந்த ஆண்டு திருவிழாவில் 18 வயதிற்கு உட்பட்டவர்கள் கலந்து கொள்ளக்கூடாது என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர் இளைஞர்களை நல்வழிப்படுத்தும் விழாவில் ஏன்? அவர்கள் கலந்து கொள்ளக் கூடாது.

ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு கருத்துகளை மையமாகக் கொண்டு ஊர்வலம் நடத்தப்படுகிறது. அதே போல இந்த ஆண்டு பிரிவினை வாதத்தை முறியடிப்போம், தேசிய சிந்தனையை வளர்ப்போம் என்ற கருத்தை முன்வைத்து ஊர்வலத்தை நடத்த உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News