- இந்த மாநாட்டிற்கு அவைத்தலைவர் சத்தியமூர்த்தி தலைமை வகித்தார்.
- மாநாட்டை சங்க ஆலோசகர்கள் பாலசுந்தரம், வைத்தியநாதன் ஆகியோர் தொடக்கி வைத்தனர்.
தஞ்சாவூர்:
தஞ்சையில் மூவேந்தர் அனைத்து கட்டிட மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் சங்கத்தின் சார்பில் மூன்றாவது மாநில மாநாடு நடைபெற்றது.
இந்த மாநாட்டிற்கு அவைத்தலைவர் சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். மாநாட்டை சங்க ஆலோசகர்கள் பாலசுந்தரம், வைத்தியநாதன் ஆகியோர் தொடக்கி வைத்தனர்.
மாநில துணைத்தலைவர் ரகுபதி முன்னிலை வகித்தார். பொதுச் செயலாளர் கருப்பையா, மாவட்டச் செயலாளர் முத்தையா ஆகியோர் வரவேற்புரை ஆற்றினர்.
மாநாட்டில் சங்கத்தின் நிறுவனரும் செயல் தலைவருமான கனகராஜுக்கு பவள விழாவும், பாராட்டு விழாவும் நடைபெற்றன.
மாநாட்டில், பெண் தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய வயதினை 55 ஆக நிர்ணயம் செய்து ஆணை பிறப்பிக்க வேண்டும், ஓய்வூதியம் ரூ.3 ஆயிரம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநாட்டில் பேசப்பட்டன. முடிவில் தலைமை நிலைய பேச்சாளர் கோவிந்தராஜன் நன்றி கூறினார்.