உள்ளூர் செய்திகள்
தஞ்சையில், அடையாளம் தெரியாத மூதாட்டி பிணம்
- சாலையோரம் 55 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் பிணமாக கிடந்தார்.
- இறந்து கிடப்பவர் யார்? எந்த ஊர் ? என்ற விபரம் தெரியவில்லை.
தஞ்சாவூர்:
தஞ்சை ரெயில்வே குட்ஷெட் சாலை யோரம் 55 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பிணமாக கிடந்தார்.
இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து உடனடியாக தெற்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிணத்தை பார்வையிட்டு விசாரித்தனர்.
ஆனால் இறந்து கிடப்பவர் யார்? எந்த ஊர் ? என்ற விபரம் தெரியவில்லை.
இதையடுத்து பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.