தமிழ்நாடு செய்திகள்

நாம் தமிழர் கட்சியை ஒரு பெரிய கட்சியாக எடுத்துக்கொள்ள முடியாது- ஜெயக்குமார்

Published On 2024-06-16 08:54 IST   |   Update On 2024-06-16 08:54:00 IST
  • தேர்தல் சுதந்திரமாக நியாயமாக நடக்காது என்பதால் தேர்தலை புறக்கணிக்கிறோம்.
  • எதார்த்த நிலையை புரிந்து நாங்கள் முடிவெடுத்து இருக்கிறோம்.

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:

தேர்தல் சுதந்திரமாக நியாயமாக நடக்காது என்பதால் தேர்தலை புறக்கணிக்கிறோம்.

இப்போதைக்கு விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக முடிவெடுத்து இருக்கிறோம். இது பற்றி மட்டும் தான் பேச முடியும்.

எதார்த்த நிலையை புரிந்து நாங்கள் முடிவெடுத்து இருக்கிறோம். என்டிஏ, நாம் தமிழர் கட்சியை ஒரு பெரிய கட்சியாக எடுத்துக்கொள்ள முடியாது. அதிமுக தான் பெரிய கட்சி.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தேமுதிக நிலைப்பாடு குறித்து பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசி இருப்பார் என்று கூறினார்.

Tags:    

Similar News