தமிழ்நாட்டுக்கு மொத்தமாக பூஜ்ஜியத்தை மட்டுமே கொடுத்துள்ளது தி.மு.க. அரசின் பட்ஜெட் - அண்ணாமலை
- வருமானம் ஈட்டாத கடனை வாங்கி செலவு செய்யும் அரசாக தி.மு.க. அரசு உள்ளது.
- உயர்கல்வியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் 2% அளவிற்கு குறைந்துள்ளது.
தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் கோவையில் தமிழக பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* தி.மு.க. அரசின் பட்ஜெட்டால் தமிழக மக்களுக்கு எந்தப் பலனும் இல்லை.
* வருமானம் ஈட்டாத கடனை வாங்கி செலவு செய்யும் அரசாக தி.மு.க. அரசு உள்ளது.
* தி.மு.க. அரசு தனது கடைசி பட்ஜெட் உரையிலும் பொதுமக்களை ஏமாற்றுவதை விடவில்லை.
* பல்வேறு மக்களின் கோரிக்கைகளை கண்டுகொள்ளாமல் பட்ஜெட்டில் பொய் சொல்லுவேன் என நிதி அமைச்சர் அடம்பிடித்திருக்கிறார்.
* எது குறித்தும் அக்கறை இல்லாமல் வழக்கம்போல பட்ஜெட்டில் பொய்களை வாசித்துள்ளார் நிதி அமைச்சர்.
* 2027 மார்ச் 31-ல் தமிழகத்தின் மொத்த கடன்தொகை 10.62 லட்சம் கோடியாக இருக்கும் என்று பட்ஜெட்டில் உள்ளது.
* கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்டங்களுக்க திருத்தப்பட்ட திட்ட அறிக்கையை நிதியமைச்சர் ஏன் சமர்ப்பிக்கவில்லை.
* உயர்கல்வியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் 2% அளவிற்கு குறைந்துள்ளது.
* கோவில்கள் புனரமைப்புக்காக ரூ.8,200 கோடி செலவு செய்துள்ளதாக பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.
* வெறும் ரூ.82 கோடி மட்டுமே கோவில்கள் புனரமைப்புக்காக செலவிடப்பட்டுள்ளது.
* கோவில்கள் புனரமைப்பு தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
* தி.மு.க. அரசின் தோழி திட்டம், கலைஞர் கனவு திட்டம் ஆகியவை மத்திய அரசின் திட்டங்கள்.
* தமிழ்நாட்டுக்கு மொத்தமாக பூஜ்ஜியத்தை மட்டுமே கொடுத்துள்ளது தி.மு.க. அரசின் பட்ஜெட்.
இவ்வாறு அவர் கூறினார்.