உள்ளூர் செய்திகள்

தண்டையார்பேட்டையில் மிக்சியில் அரைத்து போதை பாக்கு விற்பனை- 2 வாலிபர்கள் கைது

Published On 2023-03-12 06:52 GMT   |   Update On 2023-03-12 06:52 GMT
  • தண்டையார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவேலன் தலைமையில் போலீசார் அப்பகுதியில் உள்ள வீட்டில் சோதனை செய்தனர்.
  • கைதான 2 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

திருவொற்றியூர்:

தண்டையார்பேட்டை, வீராகுட்டி தெருவில் அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து தண்டையார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவேலன் தலைமையில் போலீசார் அப்பகுதியில் உள்ள வீட்டில் சோதனை செய்தனர். இதில் ஒரு வீட்டில் மிக்சியில் அரைத்து மாவா போன்ற போதை பாக்குகளை தயாரித்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இது தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த ஆதி கேசவன்(34),ராஜா என்கிற குள்ள ராஜா (38) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 38 கிலோ மாவா, 8 கிலோ ஜர்தா மற்றும் 2 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

விசாரணையில் அவர்கள் போதை பாக்குகளை வீட்டில் தயாரித்து செல்போன் மூலம் ஆர்டர் பெற்று அதனை வாடிக்கையாளர்களின் வீட்டிற்கே சென்று சப்ளை செய்து வந்தது தெரியவந்தது.

கைதான 2 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News