உள்ளூர் செய்திகள்

செல்போன் பறித்த வாலிபர் கைது 

Published On 2022-12-31 10:23 GMT   |   Update On 2022-12-31 10:26 GMT
  • செல்போன் பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்
  • 2 பேருக்கு போலீஸ் வலை

திருச்சி:

திருச்சி திருவெறும்பூர் கலைஞர் நகரை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் சந்திரன் (வயது 31). இவர் அரியமங்கலம் ரயில்வே கேட் அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது, மூன்று பேர் அங்கு வந்தனர்.

அதில் ஒருவன் அவசரத்துக்கு ஒரு போன் செய்ய வேண்டும் உங்கள் போனை கொடுங்கள் என கேட்டு வாங்கினார். பின்னர் மூன்று பேரும் சந்திரனின் செல்போனை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.

இதுகுறித்து அரியமங்கலம் குற்றப்பிரிவு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சுசிலா வழக்கு பதிந்து ஜாகிர் உசேன் என்ற வாலிபரை கைது செய்தார். மேலும் தப்பி ஓடிய பாலமுருகன், பாட்ஷா ஆகிய இரண்டு பேரை தேடி வருகின்றனர்

Tags:    

Similar News