உள்ளூர் செய்திகள்

மேட்டுபாளையத்தில் தூய்மைக்கான மக்கள் இயக்கம் தொடக்க விழா - எம்.எல்.ஏ. மரக்கன்றுகளை நட்டு வைத்தார்

Published On 2022-07-16 10:27 GMT   |   Update On 2022-07-16 10:27 GMT
  • எம்.எல்.ஏ. தியாகராஜன் தலைமை தாங்கி திடக்கழிவு மேலாண்மை வளமீட்பு மைய பூங்கா வளாகத்தில் பல அரிய வகை மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.
  • பேரூராட்சி செயல் அலுவலர் குமார் மற்றும் பலர் தூய்மைக்கான மக்கள் இயக்கம் குறித்து பேசினர்.

திருச்சி:

தா.பேட்டை அடுத்த மேட்டுப்பாளையம் பேரூராட்சியில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் தொடக்க விழா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு முசிறி தொகுதி எம்எல்ஏவும், திருச்சி வடக்கு மாவட்ட செயலாளருமான காடுவெட்டி ந.தியாகராஜன் தலைமை தாங்கி திடக்கழிவு மேலாண்மை வளமீட்பு மைய பூங்கா வளாகத்தில் பல அரிய வகை மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

பேரூராட்சித் தலைவர் சௌந்தரராஜன் அனைவரையும் வரவேற்றார். பேரூராட்சி செயல் அலுவலர் குமார் மற்றும் பலர் தூய்மைக்கான மக்கள் இயக்கம் குறித்து பேசினர்.

விழாவில் திமுக ஒன்றிய செயலாளர்கள் கே.கே.ஆர்.சேகரன், கே.பெரியசாமி, நகர செயலாளர்கள் தர்மராஜ், தங்கராசு, தலைமை பொதுக்குழு உறுப்பினர் கணேசன், பேரூராட்சி உறுப்பினர்கள், பணியாளர்கள் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

இறுதியில் பேரூராட்சி தலைமை எழுத்தர் சம்பத் நன்றி கூறினார்.

Tags:    

Similar News