உள்ளூர் செய்திகள்
மன அழுத்தத்தில் பெண் தூக்கு போட்டு தற்கொலை
- மன அழுத்தத்தில் பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- பெயிண்டிங் தொழில் செய்து வருகிறார்.
திருச்சி:
திருச்சி மாவட்டம் பீமநகர் கறிக்கார தெரு பகுதியை சேர்ந்தவர் காயத்ரி. இவருக்கும் கிருஷ்ணன் என்பவருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. கிருஷ்ணன் பெயிண்டிங் தொழில் செய்து வருகிறார். மேலும் அவர் மதுவுக்கு அடிமையாகி இருந்ததால் சென்னையில் உள்ள போதை தடுப்பு மற்றும் மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் நேற்று காயத்ரிக்கு ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தந்தை சசிதரன் திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.