உள்ளூர் செய்திகள்

சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணையை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

Published On 2022-07-28 09:46 GMT   |   Update On 2022-07-28 09:46 GMT
  • நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்துவதை கண்டித்து திருச்சியில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
  • மாநகர் மாவட்ட தலைவர் ஜவகர் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருச்சி கலை, தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் வக்கீல் கோவிந்தராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்

திருச்சி:

திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் சோனியாகாந்தியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக அமலாக்கத்துறை மூலமாக 3-வது நாளாக விசாரணைக்கு அழைத்த மத்திய அரசை கண்டித்து ஸ்ரீரங்கம் ராஜகோபுரம், மகாத்மா காந்தி சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாநகர் மாவட்ட தலைவர் ஜவகர் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருச்சி கலை, தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் வக்கீல் கோவிந்தராஜ், ஸ்ரீரங்கம் கோட்டத்தலைவர் சிவாஜி சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் வக்கீல் சரவணன், பொருளாளர் இளையராஜா, வட்டார தலைவர்கள் நல்லேந்திரன், லால்குடி சுப்பிரமணியன், கே.பி.ராஜா, கோட்டத்தலைவர் ராஜ்மோகன், வில்ஸ் முத்துக்குமார்,

ஹெலன், அமிர்தவள்ளி, டேவிட், கிரேசி, ஜார்ஜ், நிஜவிரப்பா, கதிரேசன், முரளி, மாவட்ட பொதுச் செயலாளர்கள் சிவா, அண்ணாசிலை விக்டர், மாவட்ட செயலாளர்கள் ராஜா டேனியல் ராய், பிலால், அனந்த பத்மநாபன், பட்டேல், ஜீவா நகர் ராஜா,

எஸ்.சி., எஸ்.டி. பிரிவு தலைவி ஜோதி, மாநில மகளிர் அணி செயலாளர் வக்கீல் மோகனாம்பாள், பஞ்சாயத்து ராஜ் பிரிவு தலைவர் அண்ணாதுரை, தியாகராஜன், ஸ்ரீரங்கம் கோட்ட நிர்வாகிகள் செல்வி, குமரன், கதர் ஜெகநாதன், அணில் மாதவன், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட பொதுச்செயலாளர் உறையூர் கிருஷ்ணா, ஜெயம் கோபி, ஸ்ரீரங்கம் கிருஷ்ணா,

வார்டு தலைவர்கள் முருகன், செளந்தர், சக்தி, வெங்கடேஷ், வடிவேலு, தீலிபன் பன்னை சரவணன், பிரியங்கா பட்டேல், அய்யா கண்ணு, அல்லூர் எழிலரசன் அன்பில் ராஜேந்திரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News