உள்ளூர் செய்திகள்
குற்றசம்பவங்களை தடுக்க திண்டிவனத்தில் போலீசார் விடிய, விடிய வாகன சோதனை
- சப்-இன்ஸ்பெக்டர் வினோத் ராஜ் தலைமையில் போலீஸ்காரர்கள் வசந்த ராஜ், அய்யனார், முருகானந்தம், ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
- போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் விடிய விடிய திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் முழுவதும் குற்ற சம்பவங்களை குறைக்கும் பொருட்டு விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவின் பேரில் திண்டிவனம் டி.எஸ்.பி.சுரேஷ் பாண்டியன் மேற்பார்வையில் திண்டிவனம்- மரக்காணம் சாலையில் சப்-இன்ஸ்பெக்டர் வினோத் ராஜ் தலைமையில் போலீஸ்காரர்கள் வசந்த ராஜ், அய்யனார், முருகானந்தம், ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அதேபோல விழுப்புரம் மாவட்டம்ரோசனை, ஒலக்கூர், வெளிமேடு பேட்டை, மயிலம், போன்ற பல்வேறு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் விடிய விடிய திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.எப்.ஆர். எஸ். (குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் கருவி)போலீசார் சோதனையில் ஈடுபட்டனர் மேலும் முறையான ஆவணங்கள் இல்லாத வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.