உள்ளூர் செய்திகள்
- பழைய பஸ் நிலையத்தில் நடந்தது
- மாற்றத்திறனாளிகளுக்கு உதவித் தொகை உடனடியாக வழங்க வலியுறுத்தல்
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பழைய பஸ் நிலையம் எம்ஜிஆர் சிலை முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அக்னிபத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட துணைச் செயலாளர் அப்பாசாமி தலைமை தாங்கினார்.
இதில் நிறுத்தப்பட்ட மாற்றத்திறனாளிகளின் உதவித் தொகையை உடனடியாக வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் பேசினர். இதில் மாவட்ட தலைவர் கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.