உள்ளூர் செய்திகள்
- பிரபாகரன் என்பவர் தனியார் டெலிவரி செய்யும் நிறுவனத்தில் 2 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்துள்ளார்.
- இரவு அலுவலகத்தின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து பணம் மற்றும் டி.வி.யை திருடி சென்றுள்ளார்.
உடுமலை :
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியை சேர்ந்த பிரபாகரன் (29) என்பவர் உடுமலையில் உள்ள தனியார் டெலிவரி செய்யும் நிறுவனத்தில் 2 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த மாதம் வேலையை விட்டு நின்றுள்ளார். இந்நிலையில் பணியாற்றி வந்த நிறுவனத்தை நோட்டம் பார்த்த இவர் சம்பவத்தன்று இரவு அலுவலகத்தின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து பணம் மற்றும் டி.வி.யை திருடி சென்றுள்ளார்.
போலீசார் விசாரணை நடத்தி ஊழியர் பிரபாகரனை கைது செய்தனர். அவரிடமிருந்து திருடப்பட்ட பணம் மற்றும் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.