உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

உடுமலை ஓம்சக்தி புற்றுக்கண் மாரியம்மன் கோவில் ஆண்டு உற்சவம் வருகிற 2-ந்தேதி தொடங்குகிறது

Published On 2022-07-28 05:28 GMT   |   Update On 2022-07-28 05:28 GMT
  • 43ம் ஆண்டு உற்சவம் வருகிற 2-ந் தேதி துவங்குகிறது.
  • ஆகஸ்டு 3-ந்தேதி திருக்கல்யாணமும், அன்னதானமும் நடைபெறுகிறது.

உடுமலை :

உடுமலை யு.எஸ்.எஸ்., காலனியில் புகழ்பெற்ற ஓம்சக்தி ஸ்ரீ புற்றுக்கண் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் 43ம் ஆண்டு உற்சவம் வருகிற 2-ந்தேதி துவங்குகிறது.

அன்று கொடுமுடி சென்று தீர்த்தம் கொண்டு வருதல் நடக்கிறது. ஆகஸ்டு 3-ந்தேதி காலை 9:30 மணிக்கு திருக்கல்யாணமும், தொடர்ந்து அன்னதானமும் நடைபெறுகிறது. வரும் 4ந் தேதி மறுபூஜை, மஞ்சள் நீராடுதல் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை யு.எஸ்.எஸ்., காலனி பொதுமக்கள், நண்பர்கள், விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News