search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆண்டு உற்சவம்"

    • 43ம் ஆண்டு உற்சவம் வருகிற 2-ந் தேதி துவங்குகிறது.
    • ஆகஸ்டு 3-ந்தேதி திருக்கல்யாணமும், அன்னதானமும் நடைபெறுகிறது.

    உடுமலை :

    உடுமலை யு.எஸ்.எஸ்., காலனியில் புகழ்பெற்ற ஓம்சக்தி ஸ்ரீ புற்றுக்கண் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் 43ம் ஆண்டு உற்சவம் வருகிற 2-ந்தேதி துவங்குகிறது.

    அன்று கொடுமுடி சென்று தீர்த்தம் கொண்டு வருதல் நடக்கிறது. ஆகஸ்டு 3-ந்தேதி காலை 9:30 மணிக்கு திருக்கல்யாணமும், தொடர்ந்து அன்னதானமும் நடைபெறுகிறது. வரும் 4ந் தேதி மறுபூஜை, மஞ்சள் நீராடுதல் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை யு.எஸ்.எஸ்., காலனி பொதுமக்கள், நண்பர்கள், விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

    ×