உள்ளூர் செய்திகள்
தாராபுரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை கொள்ளை
- ரபிதீன் பெங்களூரில் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறாா்.
- வீட்டைப் பூட்டி விட்டு குடும்பத்துடன் பெங்களூரு சென்றுள்ளாா்.
தாராபுரம் :
தாராபுரத்தை அடுத்த கொளத்துப்பாளையம் பகுதியை சோ்ந்தவா் ரபிதீன் (வயது 45). இவா் பெங்களூரில் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறாா். கடந்த சில நாட்களுக்கு முன்பாக ரபிதீன் கொளத்துப்பாளையம் வந்துள்ளாா்.
பின்னா் வீட்டைப் பூட்டி விட்டு குடும்பத்துடன் பெங்களூரு சென்றுள்ளாா். இதனிடையே அவரது தம்பி பாரூக் ரபிதீன் வீட்டுக்கு சென்றுள்ளாா். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிா்ச்சியடைந்தாா். பின்னா் உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோவில் வைத்திருந்த 10 பவுன் நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.இது தொடா்பாக தாராபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.