உள்ளூர் செய்திகள்
தாராபுரத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
- 2 கிலோ மீட்டர் தொலைவில் 200க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் வீடுகள் நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்பு செய்திருந்தன.
- நெடுஞ்சாலைத்துறையினர் போலீசார் பாதுகாப்புடன் 2 பொக்லைன் எந்திரங்கள் மூலம் அகற்றினர்.
தாராபுரம் :
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகர் பகுதியில் சுங்கம் முதல் பூக்கடை முக்கு மற்றும் அமராவதி சாலை வரையிலான 2 கிலோ மீட்டர் தொலைவில் 200க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் வீடுகள் நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்பு செய்திருந்தன.இதையடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென கடைகள், வீடுகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
இந்த ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத்துறையினர் போலீசார் பாதுகாப்புடன் 2 பொக்லைன் எந்திரங்கள் மூலம் இன்று அகற்றினர்.