உள்ளூர் செய்திகள்
அவினாசியில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்- நாளை நடக்கிறது
- கோரிக்கைகளை நேரில் தெரிவித்து நிவர்த்தி செய்துகொள்ளலாம்.
- மின்சார வாரிய அலுவலகத்தில் கூட்டம் நடக்கிறது.
திருப்பூர்:
அவினாசி மின்சார வாரிய செயற்பொறியாளர் பி.பரஞ்சோதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
நாளை 14-ந்தேதி (புதன்கிழமை) காலை 11 மணிக்குஅவினாசி மின்சார வாரிய அலுவலகத்தில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது. இதற்கு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் திருப்பூர் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமை தாங்குகிறார். எனவே இந்த கூட்டத்தில் அவினாசி சுற்றுவட்டார பகுதி மின்நுகர்வோர் கலந்துகொண்டு தங்களது குறைகளை,கோரிக்கைகளை நேரில் தெரிவித்து நிவர்த்தி செய்துகொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.