- ஆயுத பூஜையை முன்னிட்டு வழிபாடு
- கோவில்களிலும் சிறப்பு பூஜை நடந்தது
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை அருகே சாலை நகர் பகுதியில் உள்ள முனீஸ்வரன் கோவிலில் திரளான மக்கள் தனது இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு ஆயுத பூஜை போட்டனர்.
நவராத்திரி விழாவின் கடைசி நாளாக ஆயுதபூஜையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அன்று வீடுகளிலும், கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். தொழில் நிறுவனங்களிலும் பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. பூஜையின்போது கொண்டைக்கடலை, அவல் பொரி உள்ளிட்டவைகளை படைத்து வழிபடுவது வழக்கம்
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த சாலை நகர் பகுதியில் உள்ள முனீஸ்வரன் கோவிலில் திரளான பொதுமக்கள் தங்களது இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்து ஆயுத பூஜை போட்டனர்.
மேலும் காலை முதல் முனீஸ்வரன் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தன.
மேலும் திருப்பத்தூர் மாவட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் தங்களுடைய வாகனங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்து கோயில் பூசாரியால் ஆயுத பூஜை போடப்பட்டது குறிப்பிடத்தக்கது.