உள்ளூர் செய்திகள்
- தேவராஜ் எம்.எல்.ஏ.தொடங்கி வைத்தார்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
திருப்பத்தூர்:
கந்திலி அருகே உள்ள சின்னூர் மலை குன்றின் மீது ஸ்ரீ பாலமுருகனை கோவில் உள்ளது.
இந்த கோவிலுக்கு ஆடி 18 முன்னிட்டு சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் வருகை தருவதை ஒட்டி அப்பகுதிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர் .
அதனை ஒட்டி சிறப்பு பஸ்களை தேவராஜ் எம் எல் ஏ கொடியை அசைத்தும் அன்னதானத்தை தொடங்கி வைத்து பேசியதாவது:-
கோவிலுக்கு குடிநீர், மற்றும் சாலை வசதி, பஸ் வசதி கேட்டுள்ளீர்கள் உடனடியாக செய்து தரப்படும் என கூறினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் கே. எஸ். அன்பழகன், ஒன்றிய கவுன்சிலர் அசோக்குமார், ஊராட்சி மன்ற தலைவர் பிரபு ஊர் கவுண்டர்கள் கே. வெங்கடாசலம், பி ரமேஷ் ஜெகதீசன், மாரப்பன், குணசேகரன், கிருஷ்ணன், உட்பட ஏராளமான கலந்து கொண்டனர்.