உள்ளூர் செய்திகள்
- படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்ததால் விபரீதம்
- போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை:
அசாம் மாநிலம் கல்யான்பூர் பகுதியை சேர்ந்தவர் தாலிப் அலி மகன் ஜெலில் அலி இவர் கேரளா மாநிலம் திருச்சூரில் கோழி கறி கடையில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் அஸ்ஸாமிலிருந்து திருச்சூருக்கு ரெயிலில் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்துள்ளார்.
அப்போது அவர் ேஜாலார்பேட்டை அருகே நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் ரெயில் சக்கரத்தில் சிக்கி அவர் பரிதாபமாக இறந்தார். ேஜாலார்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.